ஆப்நகரம்

குளித்துக்கொண்டே பைக் பயணம்: வியட்நாமில் வினோத சம்பவம்!!

இளைஞர்கள் இருவர், பைக்கில் பயணித்தப்படி குளித்து சென்ற வினோத சம்பவம் வியாட்நாமில் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 26 Jan 2020, 6:27 pm
வியட்நாமின் பின் டுவாங் மாகாணத்தைச் சேர்ந்த ஹூய்ன்தன் கான் என்ற இளைஞரும், அவரது நண்பரும் பைக்கில் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் இருவரும் மேலாடை அணியவில்லை. ஆனால், பைக்கில், இருவருக்கும் மத்தியில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்துக்கொண்டனர்.
Samayam Tamil குளித்துக்கொண்டே பைக் பயணம்: வியாட்நாமில் வினோத சம்பவம்


அந்த தண்ணீரை எடுத்து, தன் மீதும், பைக்கை ஓட்டிய நபரின் மீதும், சீட்டின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஊற்றிக் கொண்டே சென்றார். அத்துடன் அவர்கள் இருவரும் பயணித்தப்படி உடலுக்கு சோப்பும் போட்டுக் கொண்டனர்.

சீனாவின் வலைக்குள் சிக்காமல் "நோ' சொன்ன பிரதமர் மோடி!!

இப்படி இளைஞர்கள் இருவர், பைக்கில் பயணித்தப்படி குளித்துக்கொண்டு போன வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதேசமயம், நெட்டிசன்கள் பலர் இச்சம்பவத்தை விமர்சித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, பைக்கை ஓட்டிச்சென்ற ஹூய்ன்தன் கான் போலீசிடம் சிக்கினார். போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டதற்காக கானுக்கும், அவருக்கு பின்னால் அமர்ந்து சென்றவருக்கும் தலா 80 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

டெல்லியில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

ஓட்டுனர் உரிமம் வைத்திராத ஹூய்ன்தன் கானுக்கு, பைக்கை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

அடுத்த செய்தி