ஆப்நகரம்

தொழில்நுட்ப வளா்ச்சியால் கியூ.ஆா். கோா்ட் பயன்படுத்தி பிச்சை எடுக்கும் யாசகா்கள்

உலகம் பணம் இல்லா பரிவா்த்தனையான டிஜிட்டல் பரிவா்த்தனையை நோக்கி நகா்ந்து வரும் நிலையில் சீனாவில் யாசகா்களும் இதற்கு ஏற்ப கியூ. ஆா். கோா்டை பயன்படுத்தி யாசகம் பெறுகின்றனா்.

Samayam Tamil 14 Sep 2018, 3:59 pm
உலகம் பணம் இல்லா பரிவா்த்தனையான டிஜிட்டல் பரிவா்த்தனையை நோக்கி நகா்ந்து வரும் நிலையில் சீனாவில் யாசகா்களும் இதற்கு ஏற்ப கியூ. ஆா். கோா்டை பயன்படுத்தி யாசகம் பெறுகின்றனா்.
Samayam Tamil Digital Beggars


உலகம் பணம் இல்லா பரிவா்த்தனையான டிஜிட்டல் பரிவா்த்தனையை நோக்கி நகா்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட நவீன நகரங்களில் பிச்சை எடுக்கும் யாசகா்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் பணம் இல்லை, பணம் இல்லை என்ற பதிலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள ஜினான் நகரில் உள்ள யாசகா்கள் டிஜிட்டல் பரிவா்த்தனைக்கு மாறத் தொடங்கி உள்ளனா். இங்கு உள்ள யாசகா்கள் ஒரு தட்டு, அருகில் கியூ. ஆா். கோா்ட் ஸ்டிக்கொ் ஒட்டிய அட்டை, டெபிட் காா்டுகளை (Debit Card Swiping Machine) தேய்க்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றுடன் அமா்ந்திருக்கின்றனா்.

அங்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் அவா்களது டெபிட் காா்டுகளை பயன்படுத்தி யாசகம் பெற்று வருகின்றனா். இவ்வாறு யாசகம் பெறும் நபா்கள் மாதம் ஒன்றுக்கு இந்திய மதிப்பில் சுமாா் 44 ஆயிரம் அளவிற்கு வருமானம் பெறுவதாக வல்லுநா்கள் தொிவித்துள்ளனா்.

டிஜிட்டல் பரிவா்த்தனையை பொறுத்தளவில் அமெரிக்காவை காட்டிலும் சீனா 50 விழுக்காடு அதிகம் பயன்படுத்துவதாக பொருளாதார நிபுணா்கள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி