ஆப்நகரம்

மறுபடியும் மொதல்ல இருந்தா? மீண்டும் தலைதூக்கும் கொரோனா!

மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியுள்ளதால் சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 27 Dec 2020, 7:13 pm
பல்வேறு இன்னல்களுக்கும், இழப்புகளுக்கும் பிறகு கொரோனா தடுப்பூசி தயாராகி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க தொடங்கியுள்ளது.
Samayam Tamil beijing tightens covid 19 restrictions as cases detected across capital city
மறுபடியும் மொதல்ல இருந்தா? மீண்டும் தலைதூக்கும் கொரோனா!


கொரோனாவின் முதல் அத்தியாயம்

கடந்த ஆண்டு இறுதியில் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஏறக்குறைய ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்டது. முதன்முதலில் சீனாவில் வூகானில் உள்ள மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.

புதிய கொரோனா அவதாரம்

ஏற்கெனவே பரவி வரும் கொரோனாவுக்கு எப்போது முடிவு வரும் என காத்திருக்கும் நிலையில், இங்கிலாந்தில் கொரோனா உருமாறி புதிய கொரோனாவாக பரவி வருகிறது. புதிய கொரோனா முன்பை விட 70% அதிக வேகத்தில் பரவுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

​கொரோனாவை ஒழித்த சீனா

சீனாவில் கொரோனா முதன்முதலாக பரவினாலும், தீவிர முயற்சிகளால் அங்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. அவ்வப்போது சில பகுதிகளில் கொரோனா பரவத் தொடங்கினாலும், உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளால் வைரஸ் மேற்கொண்டு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

​சூதானமான சீனா

சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொரோனா பரவிவிட்டதாக மற்ற நாடுகள் கோபத்தில் இருக்கின்றன. ஆனால், இப்போது மற்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு வைரஸ் பரவிவிடக்கூடாது என சீன அரசு எச்சரிக்கையாக இருக்கிறது. உதாரணமாக, இங்கிலாந்துக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக்கு சீனா தடை விதித்துள்ளது.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பெய்ஜிங்கில் மக்கள் நடமாட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் இப்போது எமர்ஜென்சி நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புள்ள பகுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

​விடுமுறையால் அச்சம்

சீனாவில் விடுமுறைக் காலம் தொடங்கியுள்ளதாலும், கொரோனா மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாலும் அதிகாரிகள் அச்சத்தில் இருக்கின்றனர். ஜனவரி 1ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள் நகரத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையின்றி பயணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி