ஆப்நகரம்

பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இருவருக்கு 17 ஆண்டு சிறை!

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

TNN 31 Aug 2017, 4:33 pm
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Samayam Tamil benazir bhutto murder case former dig saud aziz sp khurram shehzad get 17 years jail
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் இருவருக்கு 17 ஆண்டு சிறை!


பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் பிரதமர் பெனாசீர் பூட்டோ. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பான வழக்கில் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மற்றும் 2 போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் நேற்றுடன் விசாரணை முடிந்தது. ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதத் தடுப்பு மையத்தில் இவ்வழக்கின் விசாரணைகள் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து, இவ்வழக்கில் அந்நாட்டு தீவிரவாதத் தடுப்புப் பிரிவு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட டிஐஜி ஆசாத் மற்றும் ஷாஷெத் ஆகிய போலீசார் இருவருக்கும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இவ்வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி