ஜெர்மனியில் உள்ள பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் டேங்கர் லாரி ஓட்டிவந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய தீவிரவாதியை, இத்தாலி போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ளதால், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் அதற்கென பிரத்யேக சந்தை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பரிசுப் பொருள் விற்பனைக் கடைகள் செயல்பட்டுவந்தன. இந்நிலையில், 3 நாட்கள் முன்பாக, நள்ளிரவு நேரத்தில் இந்த கடைத் தெருவில், டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து மோதியது.
இதில், கடைத்தெருவில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொண்டன. இதன்படி, இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இளைஞனை போலீசார் சோதனையிட்டனர்.
அவனே, பெர்லின் நகரில் தாக்குதல் நடத்தியவன் என்பது உறுதியான நிலையில் அங்கிருந்து தப்பியோடும் வகையில், போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
24 வயதான அந்த சிறுவன், டுனிஷியா நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அகதியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த அவன், பல்வேறு குற்றச்செயல்களுக்காக, சிறைத்தண்டனையும் பெற்றுள்ளான். சமீபத்தில் ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்த அந்த இளைஞன், ஐஎஸ் உதவியோடு, பெர்லின் சந்தையில் டேங்கர் லாரி மோதி, தாக்கியுள்ளதாக, போலிசாரி கூறியுள்ளனர்.
The Tunisian man suspected of carrying out the deadly Berlin truck attack at the Christmas market was shot dead by police in Milan on Friday, Italy's interior minister Marco Minniti said.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ளதால், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் அதற்கென பிரத்யேக சந்தை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பரிசுப் பொருள் விற்பனைக் கடைகள் செயல்பட்டுவந்தன. இந்நிலையில், 3 நாட்கள் முன்பாக, நள்ளிரவு நேரத்தில் இந்த கடைத் தெருவில், டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்து மோதியது.
இதில், கடைத்தெருவில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு, ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தேடும் பணியில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொண்டன. இதன்படி, இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த இளைஞனை போலீசார் சோதனையிட்டனர்.
அவனே, பெர்லின் நகரில் தாக்குதல் நடத்தியவன் என்பது உறுதியான நிலையில் அங்கிருந்து தப்பியோடும் வகையில், போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளான். இதையடுத்து, அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
24 வயதான அந்த சிறுவன், டுனிஷியா நாட்டைச் சேர்ந்தவன் என்றும், அகதியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்த அவன், பல்வேறு குற்றச்செயல்களுக்காக, சிறைத்தண்டனையும் பெற்றுள்ளான். சமீபத்தில் ஜெர்மனியில் அடைக்கலம் புகுந்த அந்த இளைஞன், ஐஎஸ் உதவியோடு, பெர்லின் சந்தையில் டேங்கர் லாரி மோதி, தாக்கியுள்ளதாக, போலிசாரி கூறியுள்ளனர்.
The Tunisian man suspected of carrying out the deadly Berlin truck attack at the Christmas market was shot dead by police in Milan on Friday, Italy's interior minister Marco Minniti said.