ஆப்நகரம்

காங்கோ வெடிவிபத்து: குழந்தை பலி, 32 இந்திய அமைதிப் படையினர் காயம்

கின்ஷாசா: காங்கோ நாட்டில் நடந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு குழந்தை இறந்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த 32 பேர் காயமடைந்தனர்.

TOI Contributor 8 Nov 2016, 2:55 pm
கின்ஷாசா: காங்கோ நாட்டில் நடந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு குழந்தை இறந்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த 32 பேர் காயமடைந்தனர்.
Samayam Tamil blast kills child injures 32 indian peacekeepers in east congo un
காங்கோ வெடிவிபத்து: குழந்தை பலி, 32 இந்திய அமைதிப் படையினர் காயம்


இதுகுறித்து ஐ.நா., வெளியிட்டுள்ள செய்தியில், ''காங்கோ நாட்டில் உள்ள மேற்கு கோமா பகுதியில் காலையில் ஓடும் பயிற்ச்சியில் இந்திய அமைதிப்படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இந்த வெடிவிபத்து நடந்தது. இந்த பயங்கர வெடி விபத்தில் ஒரு குழந்தை இறந்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த 32 பேர் காயமடைந்தனர். இதற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், அமைதிப் படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகி இருப்பதாக சம்பவ இடத்திற்கு அருகில் இருக்கும் மசூதியைச் சேர்ந்த இமாம் இஸ்மாயில் சலுமு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாக வெளியான செய்தியில், ''பயங்கர வெடி சத்தமும், அழுகுரலும் கேட்டது. நாங்கள் ஓடிப் போய் பார்த்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.

காங்கோவில் 18,000 ராணுவ உடை அணிந்த ஐ.நா., வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 1996-2003 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கால கட்டத்தில் அங்கு நடந்து வரும் கலவரங்களுக்கு பல லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி