ஆப்நகரம்

பயப்படாதீங்க... நா உதவ வந்திருக்கேன்..! மனிதத்தை வென்ற ஒராங்குட்டான்...

போர்னியோ வனப்பகுதிக்கு சென்ற வன பாதுகாவலர் அங்கிருந்த குழியில் சிக்கிக்கொண்டார். அதை கவனித்த ஒராங்குட்டான் குரங்கு உதவி செய்ய முயற்சிக்கும் புகைப்படம் வெளியாகி இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 8 Feb 2020, 4:34 pm
இந்தோனேசியா எல்லையில் அமைந்துள்ளது போர்னியோ தீவு. அந்த தீவில் வசித்து வரும் ஒராங்குட்டான் இன குரங்குகளை காப்பதற்கான 'ஒராங்குட்டான் சர்வைவல் ஃபவுண்டேஷன்' ஒன்று போர்னியோவில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் விலங்குகள் வசிக்கும் இடத்தில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக அறிந்த பாதுகாப்பாளர் ஒருவர் இந்த பவுண்டேஷனில் இருந்து தீவுக்கு சென்றுள்ளார்.
Samayam Tamil தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்ற வந்த ஒராங்குட்டான்



அங்கு குரங்குகள் வசிக்கும் இடத்தில் பாம்புகள் இருக்கனவா என்று ஆய்வு செய்தபோது அங்கு பாழடைந்த குட்டை ஒன்று இருந்துள்ளது. அதற்குள் இறங்கிய பாதுகாவலர் குட்டையில் இருந்த குப்பைகளை சுத்தம் செய்துகொண்டிருந்தார். பின்னர் குட்டையில் சேற்றுக்குள் சிக்கிய அவரால் வெளியில் வர முடியவில்லை.

கொன்று குவிக்கும் கொரோனா - 720 பேரை பறிகொடுத்த சீனா; அலறி துடிக்கும் உலக நாடுகள்!

இதை கண்ட ஒராங்குட்டான் ஒன்று குட்டையின் மேலே நின்றபடி, அவரை காப்பாற்றும் முயற்சியில் கை கொடுத்துள்ளது. ஆனால் காட்டு விலங்கு என்பதால் அந்த பாதுகாவலர் தனது கையை கொடுக்க மறுத்துள்ளார். இந்த சமயத்தில் அங்கு வந்த வன புகைப்பட கலைஞரான அனில் பிரபாகர் என்பவர் அந்த நிகழ்வை சற்றும் தாமதப்படுத்தாமல் படம் பிடித்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் குரங்குடைய இறக்க குணத்தை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி