ஆப்நகரம்

கொரோனாவில் இருந்து மீண்ட அதிபரின் மனைவி!!

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக பிரேசில் அதிபரின் மனைவி மிச்செல் போல்னாரோ தெரிவித்துள்ளார். தான் கொரோனாவில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்த நாட்டு மக்களுக்கு நன்றிகள் எனவும் அவர் கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Aug 2020, 6:40 pm
உலக அளவில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதிலும், பொதுமக்களை முக கவசம் அணிய சொல்லி வற்புறுத்தவும் தமக்கு உடன்பாடில்லை என்று அந்நாட்டு அதிபர் போல்சனாரோ தொடர்ந்து தெரிவித்து வந்தார்.
Samayam Tamil president wife


இந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து மூன்று வாரங்கள் தன்னைதானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இதன் பயனாக அவர், கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாக கடந்த 27 ஆம் தேதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அதிபர் கொரோனாவில் இருந்து மீண்ட அடுத்த நாளே, அவரது மனைவி மிச்செல் போல்சோனாரோவுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதையடுத்து அவரும் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கோழிக்கறியில் கொரோனா... புலம்பும் சீனா!

இதன் பயனாக, தற்போது தமக்கு கொரேனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாக மிச்செல் போல்சோனரோ தெரிவித்துள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைய தமக்காக பிரார்த்தனை செய்து கொண்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்ளதாகவும் அவர் உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.

அடுத்த செய்தி