ஆப்நகரம்

கருப்பின பெண்ணின் கழுத்தை காலால் நெரிக்கும் போலீஸ்... வைரலாகும் வீடியோ!!

கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை போலீஸ் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 14 Jul 2020, 5:39 pm
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின வாலிபரின் கழுத்தை போலீஸ் ஒருவர் நெரித்ததில் அந்த வாலிபர் உயிரிழந்தார். அண்மையில் நிகழ்ந்த இந்தக் கொடூர சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி சற்று அடங்கிய நிலையில், அதே போன்றதொரு துயர சம்பவம் பிரேசிலில் தற்போது நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil black woman


அந்நாட்டின் சயோ பால் மாகாணத்தைச் சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், அங்கு மதுபான கூடம் (பாருக்கு) ஒன்றை நடத்தி வருகிறார்.

பாருக்கு வரும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க, ஸ்பீக்கரில் துள்ளிசை பாடல்களை அந்த பெண்மணி ஒலிக்க செய்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போலீஸார், ஸ்பீக்கரில் ஒலியின் அளவை குறைக்கும்படி, பார் உரிமையாளரான பெண்ணிடம் கூறியுள்ளார்.

அடம்பிடிக்கும் ட்ரம்ப்... அச்சத்தில் இந்திய மாணவர்கள்!

இதனால் ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் தங்களை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு பதில் நடவடிக்கையாக, அந்த பெண்ணை தரையில் தலைக்குப்புற படுக்க வைத்து, அவர் கழுத்தை காலணி அணிந்த காலுடன் போலீஸ் ஒருவர் நெரித்துள்ளார். இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதையடுத்து, சம்பந்தப்பட்ட இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து, சயோ பால் மாகாண ஆளுநர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, "தி பிரேசிலியன் ரி்ப்போர்ட்" இணைய இதழ் வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

போலீசின் சித்திரவதைக்கு ஆளான பெண், விதவை என்பதுடன் ஐந்து பிள்ளைகளுக்கு தாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி