ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோ அமேசான் காட்டுக்கு தீ வைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ குற்றம் சாட்டியுள்ளார். பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் பூமியின் நுரையீரல் எனக் அழைக்கப்படுகின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் அந்தக் காட்டில் ஏற்பட்ட மாபெரும் காட்டுத்தீ உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவாதத்தைக் கிளப்பியது.
டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ, அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்திருந்தார். காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதியையும் அறிவித்தார். இந்திய பதிப்பில் இது 36 ஆயிரம் கோடி!
இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, “ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீ வைக்குமாறு பணம் கொடுத்தவர்” என்று குற்றம் சாட்டினார்.
கடத்தல் கும்பலுடன் மெக்சிகோ போலீஸ் சண்டை
லியாண்டோ டிகாப்ரியோ போல்சனரோவின் அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள டிகாப்ரியோ, “அமேசான் காட்டுத்தீ பிரச்சினையாக எழுந்துள்ள நேரத்தில், இயற்கை வளம் மற்றும் கலாசாரத்தையும் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் எந்த அமைப்புக்கும் பண உதவி செய்வதில்லை.” எனக் கூறியுள்ளார்.
“எதிர்கால நன்மைக்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ எனவும் தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ளம்: மீட்புப்படை வீரர்கள் 3 பேர் பலி
டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான லியாண்டோ டிகாப்ரியோ, அமேசான் காட்டுத்தீ குறித்து கவலை தெரிவித்திருந்தார். காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதியையும் அறிவித்தார். இந்திய பதிப்பில் இது 36 ஆயிரம் கோடி!
இந்நிலையில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ, “ஹாலிவுட் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீ வைக்குமாறு பணம் கொடுத்தவர்” என்று குற்றம் சாட்டினார்.
கடத்தல் கும்பலுடன் மெக்சிகோ போலீஸ் சண்டை
லியாண்டோ டிகாப்ரியோ போல்சனரோவின் அபாண்டமான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் எழுதியுள்ள டிகாப்ரியோ, “அமேசான் காட்டுத்தீ பிரச்சினையாக எழுந்துள்ள நேரத்தில், இயற்கை வளம் மற்றும் கலாசாரத்தையும் பாதுகாக்கப் போராடும் பிரேசில் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அதே நேரத்தில் எந்த அமைப்புக்கும் பண உதவி செய்வதில்லை.” எனக் கூறியுள்ளார்.
“எதிர்கால நன்மைக்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ எனவும் தெரிவித்துள்ளார்.
கனமழை வெள்ளம்: மீட்புப்படை வீரர்கள் 3 பேர் பலி