ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக, சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டன் முடிவு எடுத்தது. இதையொட்டி ‘பிரெக்சிட்’ மசோதா தயாரிக்கப்பட்டு, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ஒப்புதல் கிடைக்காமல், பல முறை தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம், அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
போச்சு... முடங்கியது பிரிட்டன் நாடாளுமன்றம்- ஓகே சொன்ன எலிசபெத் ராணி!
இதனைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த சூழலில் அடுத்த சில மாதங்களுக்குள் ’பிரெக்சிட்’ மசோதாவை நிறைவேற்றக் கூடிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏனெனில் மசோதா தோல்வி அடைந்தால், பிரிட்டன் எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க வேண்டி வரும். இந்நிலையில் விரைவில் ’பிரெக்சிட்’ மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
அமேசான் காடுகள் எப்படி தீப்பிடித்தது! உண்மை பின்னணி என்ன? உலகின் அழிவு தொடங்கி விட்டதா...!
இந்த சூழலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிங் கட்சியின் பிராக்னல் எம்.பி பிலிப் லீ, திடீரென எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார். இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். இதன்மூலம் புதிய பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பஹாமாவை பதற வைத்து அமெரிக்காவை நோக்கி நகரும் டோரியன் புயல்!!
ஆனால் ஒப்புதல் கிடைக்காமல், பல முறை தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம், அப்போதைய பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
போச்சு... முடங்கியது பிரிட்டன் நாடாளுமன்றம்- ஓகே சொன்ன எலிசபெத் ராணி!
இதனைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த சூழலில் அடுத்த சில மாதங்களுக்குள் ’பிரெக்சிட்’ மசோதாவை நிறைவேற்றக் கூடிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏனெனில் மசோதா தோல்வி அடைந்தால், பிரிட்டன் எந்தவித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுக்க வேண்டி வரும். இந்நிலையில் விரைவில் ’பிரெக்சிட்’ மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.
அமேசான் காடுகள் எப்படி தீப்பிடித்தது! உண்மை பின்னணி என்ன? உலகின் அழிவு தொடங்கி விட்டதா...!
இந்த சூழலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிங் கட்சியின் பிராக்னல் எம்.பி பிலிப் லீ, திடீரென எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார். இதனால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்தார். இதன்மூலம் புதிய பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பஹாமாவை பதற வைத்து அமெரிக்காவை நோக்கி நகரும் டோரியன் புயல்!!