ஆப்நகரம்

விக்கி லீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

கடந்த ஏழு ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த அசாஞ்சே கடந்த 2018 ஜூலையில் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவரை பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Apr 2019, 6:45 pm

ஹைலைட்ஸ்:

  • லண்டனில் ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளார்.
  • விக்கி லீக்ஸ் இணையதளத்தில் அமெரிக்க உள்ளிட்ட பல நாட்டு ஆவணங்களை வெளியிட்டவர்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
விக்கி லீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த ஊடகவியலாளர் ஜூலியன் அசாஞ்சே. 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

இவரது கைது குறித்து அந்நாட்டு போலீசார் கூறுகையில், “ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றுவிட்டது. இதனால் அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை விரைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்.” என தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட அசாஞ்சே, "என்னை ஸ்விடனுக்கு அனுப்பினால் அமெரிக்கா என்னை கைது செய்யக்கூடும்." எனத் தெரிவித்தார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த ஏராளமான ரகசிய ஆவணங்களைத் தன் இணையத்தளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தினார். இதன் மூலம் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்ட இவர் பல நாட்டு அரசுகளின் கண்டனங்களைச் சம்பாதித்தார்.

ஆனால், உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களின் பெரும் ஆதரவு கிடைத்தது.. நவம்பர் 2010ஆம் ஆண்டு ஸ்வீடன் நீதிமன்றம், இவரை பாலியல் குற்றவாளியாக அறிவித்தது. தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, தான் வெளியிட்ட ஆவணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சதி செய்து பொய் குற்றம் சுமத்துவதாகக் கூறினார்.

அவரை கைது செய்ய அமெரிக்கா முயற்சித்த நிலையில், லண்டனில் உள்ள ஈக்வேடார் தூதரம் அவருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தது. இதனால் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஈகுவேடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்த அசாஞ்சே கடந்த 2018 ஜூலையில் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டார். இப்போது மீண்டும் அவரை பிரிட்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி