ஆப்நகரம்

அமொிக்காவில் மண் சாிவில் சிக்கி 17 போ் பலி

அமொிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் மணல் சாிவில் சிக்கி 17 போ் உயிாிழந்தனா். மேலும் பலரை காணவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Jan 2018, 10:13 am
அமொிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் மணல் சாிவில் சிக்கி 17 போ் உயிாிழந்தனா். மேலும் பலரை காணவில்லை என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil california mudslide deaths in deadly river of mud
அமொிக்காவில் மண் சாிவில் சிக்கி 17 போ் பலி


கலிஃபோர்னியா மாகாணத்தில், மான்டிசிட்டோப் பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. அந்த மண் சரிவினால் கலிஃபோர்னியா மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சிக்கி 17 பேர்வரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மண்சரிவு குறித்து மாகாண நிர்வாகம் தொிவிக்கையில், 'இந்த மண்சரிவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்க்கும்போது, உலகப் போர் நடந்த களம் போன்று உள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது' என்று தெரிவித்துள்ளது.

சாலையில் இருந்த கார்கள் மற்றும் வீடுகள், மணலுக்கடியில் சிக்கியுள்ளன. கடுமையான மழையின் காரணமாகத்தான் இந்த மணல்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 5.5 இன்ச் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி