ஆப்நகரம்

ரயில் தடம் புரண்டு விபத்து! 53 பேர் உயிரிழப்பு!!

ரயில் தடம் புரண்டு விபத்து! 53 பேர் உயிரிழப்பு!!

TOI Contributor 22 Oct 2016, 8:18 am
மேற்கு ஆப்பிரிக்க நாடான கேமரூனில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 53 பேர் உயிரிழந்தனர். யாவுன்டே மற்றும் டோவுலா எனும் இரண்டு பெரும் நகரங்களுக்கு இடையே பயணித்த ரயில் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதால் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. வழக்கமாக 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் ரயில் 1,300 பயணிகளுடன் பயணித்துள்ளது. கேமரூரின் கன மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் பேருந்து பயணத்தை தவிர்த்து மக்கள் ரயிலில் பயணித்துள்ளனர்.
Samayam Tamil cameroon train derailed 53 dead and 300 injured
ரயில் தடம் புரண்டு விபத்து! 53 பேர் உயிரிழப்பு!!


ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். உயிரிழப்பு அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

அடுத்த செய்தி