ஆப்நகரம்

நமது நண்பர் ஜஸ்டினை கனடா வாழ் தமிழர்கள் வெற்றி பெற வைப்பார்களா!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வெளிநாடுகளில் பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால், உள்நாட்டில் இருக்கிறதா என்பதை வரும் தேர்தல் உறுதி செய்துவிடும்.

Samayam Tamil 12 Sep 2019, 4:21 pm
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், உள்ளூரில் இவருக்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Samayam Tamil Justin


லிபரல் கட்சி தலைவராக இருக்கும் ஜஸ்டின் 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது ஆண், பெண் சமத்துவம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் ஆகிவற்றை முன்வைத்து தேர்தலை சந்தித்து பெரிய அளவில் வெற்றியும் பெற்றார். தற்போது இவருக்கு எதிராக அலை வீசி வருகிறது. இவர் பல்வேறு ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தேர்தலை ஜஸ்டின் சந்திக்க இருக்கிறார். இந்த தேர்தலில் அவர் ஆட்சி அமைப்பதற்கான இடங்களை பெறமாட்டார் என்ற கருத்தே தற்போது வரை வெளியாகியுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, நேற்று முதல் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். ஆறு வாரங்களே இருக்கும் நிலையில் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஜஸ்டினால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா என்பது தெரிந்துவிடும். இவரை எதிர்த்து களத்தில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இவருக்கு தற்போது இருக்கும் செல்வாக்கு சரி சமமாக இருப்பதால், இறுதி நேரத்தில் எதுவானாலும் ஏற்படலாம். கடைசி நேர திருப்பங்களே வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும்.

கனடாவின் பிரதமர் ஆனதில் இருந்து தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் வரும்போது, கனடா வாழ் தமிழர்களின் அமைப்புக்கு சென்று தமிழர்களுடன் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடுவார். அப்போது, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் வைத்து கொண்டாடுவது டிரேட் மார்க் என்றே கூறலாம்.

''கனடா வாழ் தமிழர்கள் எங்களது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். அதற்காக இந்த நாடு எப்போதும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்'' என்று ஜஸ்டின் முன்பு கூறியுள்ளார்.

ஏற்கனவே கனடாவில் அதிகளவில் தமிழர்கள் இருக்கும் நிலையில், இவர்களது வாக்குகள் ஜஸ்டினுக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி