ஆப்நகரம்

கொரோனாவால் இறந்தவரை தேர்தலில் வெற்றிபெற வைத்த அமெரிக்கர்கள்!

கொரோனாவால் உயிரிழந்த டேவிட் அண்டால் என்பவர் அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.

Samayam Tamil 4 Nov 2020, 11:13 pm

அமெரிக்காவில் நேற்று தேர்தல் முடிவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவடையாததால் தெளிவில்லாத சூழல் நீடிக்கிறது.
Samayam Tamil David Andahl


இந்நிலையில், வடக்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் இறந்தபின் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு டகோட்டாவை சேர்ந்தவர் டேவிட் அண்டால். இவர் பண்ணை தொழில் செய்துவருகிறார்.

நடந்துமுடிந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டேவிட் அண்டால் போட்டியிட்டார். ஆனால் ஒரு மாதத்திற்கு முன் டேவிட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மிச்சிகனை தூக்கிய பைடன்: கதறும் ட்ரம்ப்

இந்நிலையில், வடக்கு டகோடாவின் பிரதிநிதிகள் அவை உறுப்பினராக டேவிட் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் இறந்துவிட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக யார் பொறுப்பு வகிக்க வேண்டுமென்பதை குடியரசு கட்சி முடிவு செய்யவேண்டும்.

இதற்காக குடியரசு கட்சி தனிக் குழு அமைத்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மக்கள் விரும்பினால் இதற்காக சிறப்பு தேர்தல் வைத்து புதிய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கலாம்.

அமெரிக்க சட்டவிதிகளின்படி, மக்களின் விருப்பமே தேர்தலின் முதன்மை குறிக்கோள். மக்களின் தீர்ப்பை மாற்றியமைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் மக்களின் குரலை நிராகரிப்பது போலானது என மாகாண அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

டேவிட்டை போலவே மிசவுரி செனட்டர் மெல் கர்னஹான், ட்ரேசி நகர மேயர் கார்ல் கியரி, வின்ஃபீல்ட் மேயர் ஹாரி ஸ்டோன்பிரேக்கர், கலிபோர்னியா செனட்டர் ஜென்னி ஒரொபெசா ஆகியோர் இறந்தபின்னும் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி