ஆப்நகரம்

ஸ்பெயினில் இருந்து தனிநாடாகுமா கேட்டலோனியா? வாக்கெடுப்பில் 90% ஆதரவு!

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

TNN 2 Oct 2017, 10:54 am
பார்சிலோனா: ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு 90% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil catalonia referendum 90 voted for independence
ஸ்பெயினில் இருந்து தனிநாடாகுமா கேட்டலோனியா? வாக்கெடுப்பில் 90% ஆதரவு!


ஸ்பெயின் நாட்டில் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கேட்டலோனியா செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போது, கேட்டலோனியா பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் வேலைவாய்ப்பின்மை பெருகியது. ஸ்பெயின் நாட்டின் மற்ற மாகாணங்களை ஒப்பிடுகையில் கேட்டலோனியாவிற்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கேட்டலோனியாவிற்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைவு.

இதனால் வெகுண்டு எழுந்த கேட்டலோனியா, தனி நாடு கோரிக்கையை முன்வைத்தது. இதையடுத்து 2014ஆம் ஆண்டு தனிநாடு கோரி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதில் குறைவான வாக்குகளே கிடைத்தது.

இந்நிலையில் நேற்று கேட்டலோனியா மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்தினர். இது சட்டவிரோதம் என்று கூறி, போலீசார் அடக்குமுறையில் இறங்கினர். இதில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, லட்சக்கணக்கான மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இதில் 42.% பேர் வாக்களித்தனர்.

பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 90% பேர் கேட்டலோனியா தனிநாடு பிரிந்து செல்ல ஆதரவாக வாக்களித்தது தெரியவந்துள்ளது.

இதனால் விரைவில் கேட்டலோனியா என்ற புதிய நாடு உதயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Catalonia referendum 90% voted for independence.

அடுத்த செய்தி