ஆப்நகரம்

பின்லாந்தில் சென்னை இன்ஜினியர் பலி

பின்லாந்து நாட்டில் மாயமான சென்னையைச் சேர்ந்த இன்ஜினியர், கடலில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

TNN 23 Sep 2017, 4:04 pm
பின்லாந்து நாட்டில் மாயமான சென்னையைச் சேர்ந்த இன்ஜினியர், கடலில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil chennai software engineer died in binland
பின்லாந்தில் சென்னை இன்ஜினியர் பலி


சென்னையைச் சேர்ந்த ஹரிசுதன் என்ற கம்யூட்டர் இன்ஜினியர், பிரபல தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பினலாந்து நாட்டிற்கு பணி நிமித்தமாக கம்பெனியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியில் பணிபுரிந்து வந்த அவர், கடந்த 8 ம் தேதி திடீரென்று மாயமானார்.

மகனிடம் இருந்து போன் கால் எதுவும் வராததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினர்.

அலுவலகத்திற்கும் ஹரிசுதன் வராததால், கம்பெனி அதிகாரிகள், பின்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினம், அங்குள்ள கெல்சிங்கு கடலில் ஹரிசுதன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், ஹரிசுதன் வார இறுதி விடுமுறையில், நண்பர்களுடன் வெளியில் சென்று வருவது வழக்கம், அவ்வாறு சென்றவர் அடுத்த நாள் முதல் அலுவலகத்துக்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, இந்த தகவலை பின்லாந்துக்கான இந்திய தூதர் வாணிராவ், உறுதி செய்தார்.
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற மகன், பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அறிந்த ஹரிசுதனின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதது வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி