ஆப்நகரம்

குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காது; மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் குருத்தெலும்பு செல்கள் புதிய காதுகளை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Samayam Tamil 2 Feb 2018, 11:47 am
சீனா தலைநகர் பெய்ஜிங்கில், உலகிலேயே முதல்முறையாக குருத்தெலும்பு செல்கள் புதிய காதுகளை உருவாக்கி மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil children receive new ears grown from their own cells in world first
குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காது; மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை!


சில வளரும் குழந்தைகளுக்கு காதின் வெளிப்பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். இதற்கு மைகுரோசியா குறைபாடு என்று பெயர். இத்தகைய குறைபாடு உடையவர்களால் மற்றவர்கள் பேசுவதை தெளிவாக கேட்க முடியாது.

எனவே மைகுரோசியா குறைபாடு உள்ளவர்களுக்கு புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளியின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் உருவாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தப்பட்டது. தற்போது பாதிக்கப்பட்டவரின் உடலிலிருந்தே எடுக்கப்பட்ட குருத்தெலும்பு ‘செல்’களில் இருந்து புதிய காதுகள் உருவாக்கியது மருத்துவ உலகில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.



1977ல் எலிகளின் உடலில் மனிதர்களின் குருத்தெலும்பு செல்கள் மூலம் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி