டெல்லி: திபெத் எல்லையில் சீனா ஆயுதங்களைக் குவிப்பதன் மூலம், இந்தியாவுடன் போருக்கு தயாராவதாக கூறப்படுகிறது.
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இந்தியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, வரைபடங்களை வெளியிடுவதும், அதன் பெயர்களை புதிதாக மாற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்திய எல்லைக்குள் சாலை அமைக்கும் பணிகள் வரை தனது ஆதிக்கத்தை சீனா காட்டியுள்ளது. சமீபத்தில் பூடான் நாட்டின் டோக்லாம் பகுதியில் சீனாவின் சாலை அமைக்கும் பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த சீனா, இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தது. தொடர்ந்து அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சிக்கிம் எல்லையில் திபெத் வடக்குப் பகுதியில் ஷின்-ஜியாங் நகருக்கு அருகே சீனா ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் குவித்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நாங்கள் சண்டைக்கு தயார்! நீங்கள் தயாரா? என்று இந்தியாவிடம் சீனா எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இந்த செயல் அமைந்துள்ளது.
China brings weapons in Tibet Border.
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இந்தியப் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு, வரைபடங்களை வெளியிடுவதும், அதன் பெயர்களை புதிதாக மாற்றியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்திய எல்லைக்குள் சாலை அமைக்கும் பணிகள் வரை தனது ஆதிக்கத்தை சீனா காட்டியுள்ளது. சமீபத்தில் பூடான் நாட்டின் டோக்லாம் பகுதியில் சீனாவின் சாலை அமைக்கும் பணிகளை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த சீனா, இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தது. தொடர்ந்து அங்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சிக்கிம் எல்லையில் திபெத் வடக்குப் பகுதியில் ஷின்-ஜியாங் நகருக்கு அருகே சீனா ஆயுதங்களையும், போர் வாகனங்களையும் குவித்து வருகிறது. இதன்காரணமாக இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நாங்கள் சண்டைக்கு தயார்! நீங்கள் தயாரா? என்று இந்தியாவிடம் சீனா எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இந்த செயல் அமைந்துள்ளது.
China brings weapons in Tibet Border.