ஆப்நகரம்

நீட் எதிரொலி; சீனா நோக்கி படையெடுக்கும் இந்திய மாணவர்கள்!

இந்தியாவில் நீட் தேர்வு அமல்படுத்தியதற்கு பின்பு மருத்துவம் படிக்க சீனாவை நோக்கி மாணவர்கள் செல்வதாக செய்திகள் வந்துள்ளன.

TOI Contributor 7 Jan 2018, 5:56 pm
இந்தியாவில் நீட் தேர்வு அமல்படுத்தியதற்கு பின்பு மருத்துவம் படிக்க சீனாவை நோக்கி மாணவர்கள் செல்வதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil china gets more indian students than britain
நீட் எதிரொலி; சீனா நோக்கி படையெடுக்கும் இந்திய மாணவர்கள்!


மேற்படிப்பு படிப்பதற்காக இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கமான ஒன்றாகும். அதிலும் பிரட்டன், லண்டனில் தான் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வந்தார்கள். இந்நிலையில், லண்டனை விட சீனாவில் தான் தற்போது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

அதன்படி, தற்போது, லண்டனில், 18,015 மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும், சீனாவில் 18,171 மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், உலக அளவில், அமெரிக்கா, லண்டனுக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் சீனா விளங்குகிறது.

சீனாவில் மருத்துவ படிப்புக்காக வருடத்துக்கு 2,000 டாலர் முதல் 3,000 டாலர் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு தான் இங்கு இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இதற்கு நீட் தேர்வு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும், நீட் தேர்வை எழுத முடியாமல் தான் இந்திய மாணவர்கள் சீனாவுக்கும், லண்டனுக்கும் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க, இங்கு க்ளிக் செய்யவும்

அடுத்த செய்தி