ஆப்நகரம்

மாணவர்களுக்கு குட் நியூஸ்! - இனி வீட்டுப்பாடம் கிடையாது என அரசு அறிவிப்பு!

மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க வீட்டுப்பாடங்கள் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 24 Oct 2021, 10:52 pm

ஹைலைட்ஸ்:

  • இனி வீட்டுப்பாடம் கிடையாது
  • சீன குழந்தைகளுக்கு செம குட் நியூஸ்!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil China School Students
மாணவர்களின் அழுத்தத்தை குறைக்க வீட்டுப்பாடங்கள் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளது.

அண்டை நாடான சீனாவில், பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வழி கல்வியால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளானதால், பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறந்த பிறகும் மாணவர்களுக்கு அதிக அளவிலான வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டது. இந்தப் பாடச் சுமையால் மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்பட்டது. வீட்டுப்பாடம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துவதால் அவர்களுக்கு விளையாடுவதற்கு அல்லது வேறு அறிவுசார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை.
'ஷாருக் கான் இதை செய்தால் போதை பொருள் சர்க்கரையாக மாறும்!' - அமைச்சர் கலகல!
இந்த விவகாரம் குறித்து சீன அரசு அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு மாணவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்றே புதிய சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு நடத்த வேண்டாம் என்று அந்த தேர்வினை அரசு ரத்து செய்ததையடுத்து, வீட்டுப்பாடமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குழந்தைகள் போதுமான அளவு ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும், அதிக நேரம் இணையத்தில் செலவழிக்காமல் இருப்பதற்காகவும், பெற்றோர்கள் சீன அரசை கேட்டுக் கொண்டதற்கு இணங்க புதிய கல்விச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி