சர்வதேச அளவில் சீனா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளர்ந்து வருகிறது. ஆனால், சீனா மீது மனித உரிமை மீறல், எல்லை விவகாரங்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. இன்று ஜி7 மாநாடு நடைபெற்றது. இதற்கு சில தினங்களுக்கு முன்பு, சீனாவில் அத்துமீறல்களை தடுக்கவும், சீனாவுடன் போட்டியிடவும் ஜி7 தயாராக வேண்டுமென அமெரிக்கா கூறி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஜி7 குழு முயற்சிகளுக்கு சீனா பதிலளித்துள்ளது. இனி சிறு சிறு குழுக்களால் உலகை ஆட்டிப்படைக்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர், “சில நாடுகளை மட்டும் உள்ளடக்கிய சிறு குழுக்கள் உலகத்தை ஆட்டிப்படைத்த காலம் போய்விட்டது.
சிறிய நாடோ பெரிய நாடோ, பணக்கார நாடோ ஏழை நாடோ, யாராக இருந்தாலும் அனைவரும் சமம் என்பதே எங்களின் நம்பிக்கை. அனைத்து நாடுகளுடன் ஆலோசித்த பிறகே சர்வதேச விவகாரங்கள் கையாளப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஜி7 குழு முயற்சிகளுக்கு சீனா பதிலளித்துள்ளது. இனி சிறு சிறு குழுக்களால் உலகை ஆட்டிப்படைக்க முடியாது என்று சீனா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர், “சில நாடுகளை மட்டும் உள்ளடக்கிய சிறு குழுக்கள் உலகத்தை ஆட்டிப்படைத்த காலம் போய்விட்டது.
சிறிய நாடோ பெரிய நாடோ, பணக்கார நாடோ ஏழை நாடோ, யாராக இருந்தாலும் அனைவரும் சமம் என்பதே எங்களின் நம்பிக்கை. அனைத்து நாடுகளுடன் ஆலோசித்த பிறகே சர்வதேச விவகாரங்கள் கையாளப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.