ஆப்நகரம்

வெடித்து சிதறி தீபிடித்த பவர் பேங்க்: நூலிலையில் உயிர் தப்பிய பயணி

சீனாவில் பேருந்தில் சென்ற பயணி ஒருவரது பையில் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Jun 2018, 3:45 pm
சீனாவில் பேருந்தில் சென்ற பயணி ஒருவரது பையில் வைத்திருந்த பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil power bank


சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் பேருந்தில் பயணிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதில் பயணம் செய்த பயணி ஒருவர், தான் கொண்டு சென்ற பையில், மொபைலை சார்ஜ் செய்தவற்காக பவர் பேங்க் வைத்திருந்தார். இந்நிலையில், அவர் சகபயணிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென்று பவர் பேங்க் வெடித்து சிதறி தீ பிடித்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட, நூலிழையில் அவர் சிறிது காயத்துடன் உயிர்தப்பினார். இந்த சம்பவம் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவானது.

வழக்கமாக மொபைல் போன்கள் தீப்பிடிக்கும் சம்பவம் அண்மை காலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது பவர் பேங்க் வெடித்து தீபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அடுத்த செய்தி