ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன. முதல்முதலாக கொரோனா வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியது. எனவே, சீனாவில் வூஹானில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் கொரோனா வைரஸ் வேண்டுமென்றே கசியவிடப்பட்டிருக்கலாம் என சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். கொரோனா எப்படி பரவத் தொடங்கியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும், அதற்கு சீனா ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் அமெரிக்க அரசு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரீவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு சீனா பதிலளித்துள்ளது.
சீன கம்யூனிஸ் கட்சியின் வெளியுறவுத் துறை தலைவர் யாங் ஜியெச்சி, “கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்காவில் சிலர் முட்டாள்தனமான கதைகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார். மேலும், தைவான் தொடர்பான விவகாரங்களை கவனமாகவும், முறையாகவும் கையாளும்படி அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதாரங்களான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகம், தொழில்நுட்பம், கொரோனா வைரஸ், மனித உரிமை பிரச்சினைகள் என பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ் கட்சியின் வெளியுறவுத் துறை தலைவர் யாங் ஜியெச்சி, “கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்காவில் சிலர் முட்டாள்தனமான கதைகளை பரப்பி வருகின்றனர்” என்று தெரிவித்தார். மேலும், தைவான் தொடர்பான விவகாரங்களை கவனமாகவும், முறையாகவும் கையாளும்படி அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதாரங்களான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தகம், தொழில்நுட்பம், கொரோனா வைரஸ், மனித உரிமை பிரச்சினைகள் என பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.