ஆப்நகரம்

பூமி மீது மோத தயாராகும் விண்வெளி நிலையம்-விஞ்ஞானிகள் அதிர்ச்சி

சீனாவின் 'தியாங்யாங் - 1' விண்வெளி ஆய்வு நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளதாக அதிர்ச்சிகாரமான தகவல் வெளியாகியுள்ளது.

TNN 16 Oct 2017, 5:11 pm
சீனாவின் 'தியாங்யாங் - 1' விண்வெளி ஆய்வு நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளதாக அதிர்ச்சிகாரமான தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil china space reaseach centre ready to clash over the earth
பூமி மீது மோத தயாராகும் விண்வெளி நிலையம்-விஞ்ஞானிகள் அதிர்ச்சி


விண்வெளி ஆய்வுக்காக, சீனாவால் கடந்த 2011ம் ஆண்டு அக்.,1ம் தேதி, 'தியாங்யாங் - 1' விண்வெளி ஆய்வு நிலையம், கோபி பாலைவனத்தில் இருந்து, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பல ஆய்வுகள் நடத்த உதவிகரமாக இருந்த விண்வெளி நிலையம். கடந்த 2016ல் இது தரை கட்டுப்பாட்டை விட்டு சென்று விட்டது. எனவே, 2017 ம் ஆண்டு இறுதியில் அல்லது, 2018 ம் ஆண்டு துவக்கத்தில், பூமி மீது மோதும்' என, சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, 8.5 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளது. மொத்தமாக இல்லாமல், காற்று மண்டலத்தை மீறி உள்ளே நுழையும் போது உராய்வினால் எரிந்து போய் சிறு சிறு துண்டுகளாக தான் பூமி மீது விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அந்த துண்டுகள், 100 கிலோவிற்கு மேல் எடை கொண்டதாக இருக்கும் போது, பூமி மீது மோதினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை சீனா மறுத்துள்ளது. மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்துள்ளது.

இதற்கு முன், ரஷ்யாவின், 20 டன் எடை கொண்ட ,'சல்யூட் - 7' விண்வெளி நிலையமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின், 77 டன் எடை கொண்ட, 'ஸ்கைலேப்' விண்வெளி நிலையமும் கட்டுப்பாட்டை இழந்து பூமி மீது விழுந்துள்ளன.

China Space reaseach centre ready to clash over the earth.

அடுத்த செய்தி