ஆப்நகரம்

ஆரஞ்சு நிறமாக மாறிய நகரம்.. காரணம் இதுதான்!

கடும் மணல் புயல் காரணமாக ஆரஞ்சு நிறத்தில் மாறிய பெய்ஜிங் நகரம்.

Samayam Tamil 17 Mar 2021, 7:12 pm
சீன தலைநகரம் பெய்ஜிங் முழுவதும் திடீரென ஆரஞ்ச் நிறமாக மாறியுள்ளது. 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
Samayam Tamil chinese capital city beijing turns orange due to worst sandstorm
ஆரஞ்சு நிறமாக மாறிய நகரம்.. காரணம் இதுதான்!


10 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

பெய்ஜிங் நகரில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மணல் புயல் பாதித்துள்ளது. இதனால், நகரம் முழுவதும் மணல் சூழ்ந்து ஆரஞ்சு நிறத்தில் மாறியுள்ளது.

​மோசமான காற்றின் தரம்

பெய்ஜிங்கில் மணல் புயலையும் தாண்டி மக்கள் போக்குவரத்து இயல்பாக இருக்கிறது. எனவே, காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

​மறைந்த கட்டிடங்கள்

கடும் மணல் புயல் காரணமாக, பெய்ஜிங்கில் உள்ள உயரமான கட்டிடங்கள் தூசி துகள்களுக்கு மத்தியில் மறைந்து காணப்படுகின்றன.

அடுத்த செய்தி