ஆப்நகரம்

மரண தண்டனை நிறைவேற்றபட்டவருக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்பளித்த நீதிமன்றம்

சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்டவருக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

TNN 4 Dec 2016, 12:17 pm
சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்டவருக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
Samayam Tamil chinese man exonerated 21 years after execution
மரண தண்டனை நிறைவேற்றபட்டவருக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என தீர்பளித்த நீதிமன்றம்


சீனாவின் ஹேபே மாகாணத்தைச் சேர்ந்தவர் நீயோஷ் பின் . 1995-ம் ஆண்டு பாலியல் வன் கொடுமை மற்றும் கொலை குற்றம் செய்ததாக இவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற இவரை குற்றவாளி என கூறி இவருக்கு மரண தண்டனை அளித்தது.பின்னர் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றபட்டது.

இந்தநிலையில் கடந்த 2005-ம் ஆண்டு நீயோஷ் பின் குற்றவாளி என தீர்பளிக்கப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. அந்த கொலை மற்றும் பாலியல் வன் கொடுமையை தான் செய்ததாக ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் , நீயோஷ் பின் குற்றமற்றவர் நிரபராதி என தீப்பளித்தது. ஆனால் நீயோஷ் பின்னுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை நிரபராதி என தீப்பளித்த நீதிமன்றத்தின் மீதும், நீதி துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டை சேர்ந்தவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி