ஆப்நகரம்

உள்ளே வராதே; சீன நீர்மூழ்கி கப்பலை மிரட்டி விரட்டி அடித்த இலங்கை

சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கை விரட்டி அடித்ததால், கராச்சி பக்கம் திரும்பியது.

TNN 13 May 2017, 1:20 pm
கொழும்பு: சீன நீர்மூழ்கி கப்பலை இலங்கை விரட்டி அடித்ததால், கராச்சி பக்கம் திரும்பியது.
Samayam Tamil chinese submarine goes to karachi after srilanka rejects to stay
உள்ளே வராதே; சீன நீர்மூழ்கி கப்பலை மிரட்டி விரட்டி அடித்த இலங்கை


தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி செயல்பட்டு வருவதால் கடும் கண்டனங்களை பெற்றது. இதற்கிடையில் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் தனது ஆதிக்கத்தை காட்டும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சீனா தனது நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியது. ஆனால் அதற்கு இடம் வழங்க இலங்கை அரசு மறுத்துவிட்டது.

புத்த பூர்ணிமா கொண்டாட்டங்களுக்காக பிரதமர் மோடி இலங்கை சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சீனப் போர்க் கப்பலுக்கு இலங்கை இடமளித்ததை இந்தியா வன்மையாக கண்டித்தது. இந்தியப் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்படும் நிகழ்வு என்று குற்றம்சாட்டியது. இந்த சூழலில் தற்போது சீன நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கராச்சிக்கு நீர் மூழ்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chinese submarine goes to Karachi after Srilanka rejects to stay.

அடுத்த செய்தி