ஆப்நகரம்

உயிர் போனாலும் பரவால்ல; தலைமுடி வேண்டும்- சீனாவில் ரயில் பயணத்தில் நடந்தேறிய விநோதம்!

சீனாவில் ரயில் கதவில் சிக்கிக் கொண்ட தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டு, நீண்ட நேரம் போராடிய பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

TNN 22 May 2017, 6:31 pm
சீனாவில் ரயில் கதவில் சிக்கிக் கொண்ட தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டு, நீண்ட நேரம் போராடிய பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
Samayam Tamil chinese woman stands with hair stuck in trains doors chooses not to chop it off
உயிர் போனாலும் பரவால்ல; தலைமுடி வேண்டும்- சீனாவில் ரயில் பயணத்தில் நடந்தேறிய விநோதம்!


அந்நாட்டின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்சூ வழியே செல்லும் ரயிலில்தான் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. ஜூஜியாங் ரயில் நிலையத்தில் கடந்த 17ம் தேதி பெண் ஒருவர் ரயிலில் ஏறியுள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக, அவர் கதவின் ஓரமாக நின்றுள்ளார். ஆனால், எதிர்பாராவிதமாக அவரது தலைமுடி ரயில் கதவில் சிக்கிக் கொண்டுவிட்டது.

இதனால், அந்த பெண், கதவை ஒட்டியபடியே நிற்க நேரிட்டது. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சக பயணிகள் அச்சம் தெரிவித்ததால், மருத்துவர்கள் சிலர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தலைமுடியை கத்தரித்து, அந்த பெண்ணை காப்பாற்றலாம் என யோசனை கூறியுள்ளனர்.

ஆனால், குறிப்பிட்ட பெண் தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டார். இதற்குப் பதிலாக, முடிந்தவரை போராடி காப்பாற்றும்படி அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, 6 ரயில் நிலையங்களுக்கு, அப்படியே கதவின் ஓரம் நின்றபடியே அந்த பெண் பயணித்துள்ளார். இறுதியில், அனைவரும் போராடி, ஒருவழியாக, அந்த பெண்ணை மீட்டனர்.

இந்த சம்பவத்தை, சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி