வினோதமான ஆடைகளை அணிந்த படி 80 ஆயிரம் பேர் பங்கேற்ற நூதன ஓட்டப்பந்தையம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நூதன ஓட்டப்பந்தையத்தில் 80 ஆயிரம் பேர் வினோதமான ஆடைகளை அணிந்து பங்கேற்றனர். சிட்டி2சர்ப் என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம் 1971ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டப்பந்தயம் மூலம் கிடைக்கும் பணம் மக்கள் நல பணிகளுக்கு வழங்கப்படும்.
இப்போட்டியில் பந்தையத் தொலைவான 14 கிலோமீட்டரை 47 நிமிடங்களில் கடந்த செலியா என்ற பெண் முதலிடத்தைப் பிடித்தார்.
86 வயதான ரோச்செஸ்டர் என்பவர் இந்த ஓட்டப்பந்தயத்தில் 1971ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இருப்பதால் அடுத்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் கூறுகிறார் ரோச்செஸ்டர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நூதன ஓட்டப்பந்தையத்தில் 80 ஆயிரம் பேர் வினோதமான ஆடைகளை அணிந்து பங்கேற்றனர். சிட்டி2சர்ப் என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம் 1971ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த ஓட்டப்பந்தயம் மூலம் கிடைக்கும் பணம் மக்கள் நல பணிகளுக்கு வழங்கப்படும்.
இப்போட்டியில் பந்தையத் தொலைவான 14 கிலோமீட்டரை 47 நிமிடங்களில் கடந்த செலியா என்ற பெண் முதலிடத்தைப் பிடித்தார்.
86 வயதான ரோச்செஸ்டர் என்பவர் இந்த ஓட்டப்பந்தயத்தில் 1971ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்று வருகிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற இருப்பதால் அடுத்த ஆண்டு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலையுடன் கூறுகிறார் ரோச்செஸ்டர்.