ஆப்நகரம்

துருக்கி ராணுவ எழுச்சி: அரசு ஊழியர்கள் பதவி பறிப்பு

துருக்கி ராணுவ புரட்சிக்கு உதவி செய்ததாக கூறப்படும் சுமார் 9 ஆயிரம் அரசு ஊழியர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

TNN 18 Jul 2016, 11:27 pm
ஆங்காரா: துருக்கி ராணுவ புரட்சிக்கு உதவி செய்ததாக கூறப்படும் சுமார் 9 ஆயிரம் அரசு ஊழியர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil civil servants dismissed who involved in coup attempt in turkey
துருக்கி ராணுவ எழுச்சி: அரசு ஊழியர்கள் பதவி பறிப்பு


துருக்கி நாட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென ராணுவ எழுச்சி ஏற்பட்டது. அதனையடுத்து அந்நாட்டில் ஆங்காங்கே மோதல்கள், கலவரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.

ராணுவ புரட்சியை கட்டுப்படுத்த பொதுமக்கள், அரசு ஆதரவு ராணுவம் ஆகியோர் களத்தில் குதித்தனர். தொடர்ந்து, அந்நாட்டில் ராணுவ புரட்சி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் 265 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக ராணுவத்தினர் 2,839 பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அந்நாட்டு பிரதமர் பினாலி எல்டிரிம் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 9 ஆயிரம் அரசு ஊழியர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ராணுவ தளபதிகள், மூத்த நீதிபதிகள், நகர ஆளுநர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

இதனிடையே, ராணுவ புரட்சியில் ஈடுப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அச் சட்டம் அந் நாட்டில் மீண்டும் கொண்டு வரப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி