ஆப்நகரம்

காணாமல் போன பெண் 2 ஆண்டுகளுக்கு பின் கடலில் உயிருடன் மீட்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் கடலில் உயிருடன் மீட்கப்பட்டார்.

Samayam Tamil 30 Sep 2020, 6:54 pm

இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் கடலில் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவை சேர்ந்த பெண் ஏஞ்செலிகா கெய்தான். இவருக்கு வயது 46.
Samayam Tamil கடலில் மீட்கப்பட்ட ஏஞ்செலிகா


தனது கணவர் 20 ஆண்டுகளாக தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், கர்ப்ப காலத்தில் அடித்து கொடுமை செய்ததாகவும் கூறும் ஏஞ்செலிகா , கணவரிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு 2018ஆம் ஆண்டில் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் தெருக்களில் சுற்றித் திரிந்த பிறகு வாழ விருப்பமில்லாமல் கடலில் குதித்துவிட்டதாக கூறுகிறார் ஏஞ்செலிகா. அதன்பின் என்ன நடந்தது என்று அவருக்கி நினைவில் இல்லை எனவும் கூறுகிறார். இந்நிலையில், ஏஞ்செலிகாவின் உடல் கடலில் மிதந்து கொண்டிருப்பதை ரொலாண்டோ விஸ்பல் என்ற மீனவர் கண்டுள்ளார்.

எய்ட்ஸ் குணமடைந்த முதல் நபர் கேன்சரால் மரணம்!

முதலில் ஏதோ மரக்கட்டை மிதக்கிறது என்று எண்ணிய ரொலாண்டோ, திடீரென ஏஞ்செலிகா கையை உயர்த்தி உதவி கேட்டதை தொடர்ந்து அவரை மீட்டுள்ளார். ஏஞ்செலிகா மீட்கப்பட்ட காட்சியை ரொலாண்டோ ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவியுள்ளது.

தண்ணீரில் இருந்து மீட்கப்பட்ட பிறகு ஏஞ்செலிகா, “நான் மீண்டும் பிறந்துவிட்டேன். நான் மரணிப்பதை கடவுள் விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

அடுத்த செய்தி