ஆப்நகரம்

கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் முடிவுக்கு வந்தது: ஹேப்பி நியூஸ்!

கொடிய உயிர்கொல்லி வைரஸான எபோலாவை ஒழித்த காங்கோ.

Samayam Tamil 18 Nov 2020, 4:24 pm

கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கி ஓராண்டு முடிந்துவிட்டது. இந்த ஒரு ஆண்டில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள், உயிர்பலிகள், பண நெருக்கடிகள் என உலக மக்கள் பெரும் அவதிகளை சந்தித்துவிட்டனர். தற்போது கொரோனா தடுப்புக்கான தடுப்பூசி இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil எபோலா வைரஸ்


இந்த காலகட்டத்தில் பல்வேறு கொடிய நோய்கள் பரவத் தொடங்கி அவற்றையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, காங்கோ நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக எபோலா தொற்று நோய் பரவி கொரோனாவுக்கு இடையே கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது.

காங்கோவில் எபோலாவால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலான காலத்தில் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், காங்கோவில் எபோலா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மற்றொரு கொடிய நோய் அவதாரம்: 70,000 கோழிகளை கொல்ல உத்தரவு!

ஜூன் மாதத்தில் காங்கோவில் எபோலா திடீரென பரவத் தொடங்கியது. அதன்பிறகு 119 பேருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் கூடுதலாக 11 பேருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக எபோலா தொற்று உறுதிசெய்யப்பட்ட 119 பேரில் 55 பேர் உயிரிழந்தனர். எபோலாவை கட்டுப்படுத்த பரவலாக தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசி பயன்பாட்டால்தான் எபோலா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே காங்கோவில் எபோலா பரவல் வெடித்தது. அதன்பின்னர் பல முறை நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காங்கோவில் எபோலாவால் 2,277 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி