ஆப்நகரம்

கொரோனா: பொருளாதார சரிவால் மனமுடைந்த நிதியமைச்சர் தற்கொலை

கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பால் மனமுடைந்த ஜெர்மனி நாட்டின் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் உலக தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 29 Mar 2020, 9:34 pm
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக மனமுடைந்த, ஜெர்மனியின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்கெஃபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Samayam Tamil germany finance minister


பிராங்பர்ட் நகரின் அருகே ரயில் பாதையில் சனிக்கிழமை நள்ளிரவு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

தாமஸ் ஸ்கெஃபரின் மரணத்தை ஜெர்மனியின் ஆளுங்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கூட்டணியின் பிரமுகர் வோல்கர் பஃபேர் உறுதி செய்துள்ளார். தாமசின் மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், அவரது இந்த முடிவு நம்பமுடியாததாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா: ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 838 பேர் சாவு

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் நெருங்கிய சகாவான வோல்கர் பஃபேர், தாமசின் அதிர்ச்சி மரணம் குறித்து மேலும் கூறும்போது, " கொரோனா வைரசால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய தாமஸ் அல்லும் பகலும் அயராது உழைத்து வந்தார்.

நிறுவனங்கள், பணியாளர்கள் என இருதரப்பு நலன்களையும் காக்கும் நோக்கில் அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

அதேசமயம் அவர், நாட்டின் பொருளாதார பாதிப்பு காரணமாக கடுமையான மனஉளைச்சலில் இருந்திருக்கிறார் என்பதை தற்போது தங்களால் உணர முடிகிறது. அவரது இழப்பு ஜெர்மனிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" என்று வோல்கர் பஃபேர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

ஸ்பெயின் இளவரசி மரணம்: கொரோனாவுக்கு அரச குடும்பத்தில் முதல் பலி

ஜெர்மனியின் ஹிசி நகரைச் சேர்ந்த 54 வயதான தாமஸ் ஸ்கெஃபருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

அடுத்த செய்தி