ஆப்நகரம்

உலகில் கொரோனா தாண்டவம் தொடர்ந்து அதிகரிக்குமா? 15 லட்சத்தை நெருங்கியது...

நாட்டில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உலகளவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2020, 12:13 am
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்போதுவரை 87 ஆயிரத்து 458 பேர் பலியாகியுள்ளனர். பாதிப்பிற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 91 ஆயிரத்து 782ஆக உள்ளது.
Samayam Tamil உலகில் கொரோனா தாண்டவம் தொடர்ந்து அதிகரிக்குமா? 15 லட்சத்தை நெருங்கியது...
உலகில் கொரோனா தாண்டவம் தொடர்ந்து அதிகரிக்குமா? 15 லட்சத்தை நெருங்கியது...


இந்த தரவரிசை பட்டியலில் உலகின் சர்வாதிகாரங்கள் கொண்ட நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இப்போதைய நேரத்தில் 4 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின் உள்ளது. ஸ்பெயினில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிற்கு ஆளாக்கியுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின் நாடுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து செல்கிறது.

ஸ்பெயினைத் தொடர்ந்து இத்தாலியில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலிதான் இப்போதைய நேரத்தில் அதிக உயிர்களை கொரோனா என்ற வைரஸ் தொற்றுக்குப் பலியாகவிட்டுள்ளது. இங்கு 17 ஆயிரத்து 779பேர் இதுவரை மடிந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் இன்றைய நிலவரம் என்ன?

சீனாவில் இந்த நோய்த் தொற்று முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் இன்று மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் இந்த தொற்றின் தாக்கம் ஜெர்மனி, இங்கிலாந்து, துருக்கி, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகள் கடுமையாக அதிகரித்து வருகிறது.

அடுத்த செய்தி