ஆப்நகரம்

கொரோனா வைரஸ் எங்கு உருவாக்கப்பட்டது? - ரகசியத்தை போட்டு உடைத்த சீன விஞ்ஞானி!

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்ட இடம் குறித்து சீன விஞ்ஞானி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 14 Sep 2020, 12:18 pm
ஹாங்காங் பொது சுகாதாரப் பள்ளியில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தவர் டாக்டர் லி மெங்-யான். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பணியாற்றிய போது சார்ஸ் போன்ற ஒருவகை வைரஸின் பாதிப்பு பலருக்கும் ஏற்படத் தொடங்கியதை கவனித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணையில் இறங்கிய லி மெங்-யான், இதன் பின்னணி குறித்து பல தகவல்களைச் சேகரித்ததாக கூறப்படுகிறது. இதனை தன்னுடைய மேற்பார்வையாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் காணாமல் போய் விடுவாய் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
Samayam Tamil Coronavirus in Wuhan


அதன்பின்னர் சீனாவில் இருந்து வெளியேறி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் வுஹானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக பொதுவெளியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், நடந்த உண்மைகள் இவை தான் என்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசுகையில், என்னிடம் அறிவியல் பூர்வமான ஆதாரம் இருக்கிறது. கொரோனா வைரஸ் மனிதர்களால் தான் உருவாக்கப்பட்டது. அதுவும் வுஹானில் உள்ள ஆய்வகத்தில் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் பலருக்கும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பே சீன அரசிற்கு இதைப் பற்றி நன்கு தெரியும். வைரஸின் ஜீனோம் தொடரானது மனிதர்களின் கைரேகை போன்று காணப்படுகிறது.

கொரோனா தாக்கிய செல்கள் இப்படித்தான் இருக்கும்!

இதன்மூலம் உண்மை என்னவென்று நீங்களே தெரிந்து கொள்ளலாம். என்னிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி வெளியே வந்தது? ஏன் இதை உருவாக்கினார்கள்? என்று விளக்க முடியும். உயிரியல் சார்ந்த ஆழ்ந்த அறிவில்லை எனினும், எனது ஆதாரங்கள் மூலம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி