ஆப்நகரம்

live: அமெரிக்க கருப்பின வாலிபரின் மரணம் ஒரு கொலை: மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் நடைபெறும் சம்பவங்களில் முக்கியமானவற்றின் தொகுப்பு

Samayam Tamil 2 Jun 2020, 6:15 pm
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இன்று வரையிலும் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்த கொரோனா பாதிப்பால் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளன.
Samayam Tamil world map in mask


தடுப்பு மருந்தும் இல்லை/ குணப்படுத்தும் மருந்தும் இல்லை என்ற நிலையில் பலவேறு கூட்டு மருந்துச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது மருத்துவத் துறை.

இதுவரை 63.65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29.03 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அதே சமயம் இந்த தொற்று காரணமாக உலகம் முழுக்க சுமார் 3.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்

லைவ் அப்டேட்ஸ்:
* கொரோனா வைரசின் மையப்புள்ளியான சீனாவின் வுஹான் நகரில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சில நூறு பேர்களுக்கு மட்டுமே நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீரமைக்க, 5.25 லட்சம் கோடி ரூபாயில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.


* கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற வாலிபரின் கழுத்தை, அமெரிக்க போலீஸ் ஒருவர் தமது காலால் நெறிக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில வைரலாக பரவியது. இதன் எதிரொலியாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் என நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபிளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என்று அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபிளாய்ட்டின் கழுத்தை போலீஸ் நெறித்தபோது, இதயம் செயலிழந்து அவர் உயிரிழந்துள்ளார் என்றும் மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 3,75,000 ஆயிரத்தைத் தொட்டது உலகம் முழுக்க கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை


* கேசினோ சூதாட்ட மையங்கள் திறக்கப்பட்டதையடுத்து சரீர விலகலுடன் விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.


* பிரேசிலில் 2 வாரங்களுகுப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

* கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் உலக அளவில் 7ஆவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

* அதே சமயம் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை விகிதம் முதல் 6 நாடுகளைக் காட்டிலும் மிக மிகக் குறைவாக உள்ளது.

* குணமடையாமல் தற்போது பாதிப்பு இருப்பவர்கள் (active cases) என்ற பட்டியலில் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா என்ற செய்தி நாளுக்கு நாள் கவலையை அதிகரிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

அடுத்த செய்தி