ஆப்நகரம்

கோவிட்-19 குணமடைந்தாலும் பிரச்சினை இருக்கு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகள் நுரையீரல் பிரச்சினைகளை சந்திப்பதாக ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.

Samayam Tamil 6 Aug 2020, 1:18 pm

கொரோனா வைரஸ் சீனாவில் வூகான் மாகாணத்தில் முதலில் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் இதுவரை 1.88 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.13 கோடி பேர் குணமடைந்துவிட்டனர். மேலும், 7.06 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil கோவிட்-19


இந்நிலையில், கோவிட்-19 நோயில் இருந்து குணமடைந்தாலும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது வூகானை சேர்ந்த முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 100 நோயாளிகள் மீண்டும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சீனாவில் புதிய உயிர்க்கொல்லி வைரஸ்... 7 பேர் பலி!

இவர்களின் சராசரி வயது 59 ஆகும். இவர்களில் 90 விழுக்காட்டினரின் நுரையீரல் சேதமடைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் 5 விழுக்காட்டினருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயில் இருந்து குணமடைந்தவர்களில் 90 விழுக்காட்டினரின் நுரையீரல் இன்னும் சேதமடைந்த நிலையிலேயே இருப்பதாகவும், நுரையீரலின் வாயுப் பரிமாற்ற திறன் இன்னும் ஆரோக்கிய நிலையை எட்டவில்லை எனவும் இந்த ஆய்வில் தெரியந்துள்ளது.

இந்த ஆய்வின்போது, நோயாளிகள் ஆறு நிமிடம் தொடர்ந்து நடக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அவர்களால் ஆறு நிமிடத்தில் வெறும் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடிந்ததாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆனால், முழுவதுமாக குணமடைந்தவர்களால் 500 மீட்டர் நடக்க முடிகிறது. எனவே, கொரோனாவிலிருந்து ஒருவர் குணமடைந்தாலும், முழு ஆரோக்கிய நிலையை உடனடியாக எட்டுவதில்லை என இந்த ஆய்வு வாயிலாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி