புத்தமதத் தலைவர் 14ஆம் தலாய் லாமா கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு மந்திரத்தை உச்சரிக்குமாறு போதனை செய்துள்ளார். சீனாவில் உள்ள புத்த மதத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி, திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு பேஸ்புக் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று அறிவுரை கூறிய தலாய் லாமா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரியுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் சொன்ன மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை ஒரு ஆடியோவாகவும் பகிர்ந்துள்ளார்.
சீனாவில் முகமூடியை 6 மடங்கு அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.3 கோடி அபராதம்
"இந்த மந்திரத்தை உச்சரிப்பது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்." எனவும் "கவலையிலிருந்து விடுபட்டு, மன அமைதி பெறலாம்" எனவும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை வரை கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மொத்தம் 5,327 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை முதல் திபெத்தில் உள்ள தலாய் லாமாவின் பொட்டாலா அரண்மனை காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை
அவர்கள் கோரிக்கையை ஏற்று அறிவுரை கூறிய தலாய் லாமா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 'ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா' என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரியுங்கள் எனக் கூறியிருக்கிறார். அவர் சொன்ன மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை ஒரு ஆடியோவாகவும் பகிர்ந்துள்ளார்.
சீனாவில் முகமூடியை 6 மடங்கு அதிக விலைக்கு விற்ற கடைக்கு ரூ.3 கோடி அபராதம்
"இந்த மந்திரத்தை உச்சரிப்பது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்." எனவும் "கவலையிலிருந்து விடுபட்டு, மன அமைதி பெறலாம்" எனவும் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, செவ்வாய்க்கிழமை வரை கொரோனா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மொத்தம் 5,327 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை முதல் திபெத்தில் உள்ள தலாய் லாமாவின் பொட்டாலா அரண்மனை காலவரையின்றி மூடப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் முதல் முறையாக குக்கீஸ் தயாரித்து சாதனை