ஆப்நகரம்

சூஃபி வழிபாட்டில் தற்கொலைப் படை தாக்குதல்; 18 பேர் பலி!

சூஃபி வழிபாட்டு இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

TNN 6 Oct 2017, 1:06 pm
பலுசிஸ்தான்: சூஃபி வழிபாட்டு இடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.
Samayam Tamil deadly blast hits shrine in pakistans balochistan
சூஃபி வழிபாட்டில் தற்கொலைப் படை தாக்குதல்; 18 பேர் பலி!


பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜல் மக்சி மாவட்டத்தில் சூஃபி பிரிவு முஸ்லீம்கள் மத விழா ஒன்றிற்காக ஒன்று கூடினர். அப்போது ஏராளமான பொதுமக்கள் ஓரிடத்தில் கூடி, வழிபாடு நடத்தினர்.

அப்போது திடீரென அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஏராளமானோர் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 18 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம், தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சூஃபி வழிபாட்டு இடங்களை குறிவைத்து, தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Deadly blast hits shrine in Pakistan's Balochistan.

அடுத்த செய்தி