ஆப்நகரம்

இந்தோனேஷியாவில் பேரிடர்: பலி எண்ணிக்கை 844ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2018, 1:14 pm
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 844ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil APTOPIXINDONESIAEARTHQUAKE 2


இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவுவின் கடற்கரையில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து கடலோர நகரான பலுவில் சுனாமி பேரலைகள் தாக்கின.

இதில் மாபெரும் பொருட்சேதமும் உயர்ச்சேதமும் ஏற்பட்டுள்ளது. சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சமீபத்திய தகவலின்படி 844 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுனாமியில் அகப்பட்ட ஏராளமானவர்களை இன்னும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி