ஆப்நகரம்

இந்தோனேசியாவை புரட்டிப் போட்ட சுனாமி; பலி 281ஆக உயர்வு; 800 பேர் காயம்!

ஜகார்த்தா: சுனாமி பாதிப்பில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது.

Samayam Tamil 24 Dec 2018, 9:28 am
இந்தோனேசியாவின் சுந்தா ஸ்ட்ரெயிட் பகுதியில் கரகோட்டா எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் முதல் தீக்குழம்பை கக்கி வருகிறது. இந்நிலையில் திடீரென எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil Tsunami


இதனால் கடலுக்கு அடியில் மாற்றங்கள் ஏற்பட்டு, சுனாமி உண்டானது. இதில் பலி எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது. 800க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் மாயமாகி உள்ளனர்.

இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பண்டேலாங், தெற்கு லாபாக், சேராக் பகுதிகளைச் சேர்ந்த வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி