ஆப்நகரம்

டென்மார்க்கில் பொது இடத்தில் பர்தா அணியத் தடை

டென்மார்க் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 May 2018, 7:07 pm
டென்மார்க் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 372917_37535140


பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டென்மார்க் அந்நாடுகளுடன் புதிதாக இணைந்துள்ளது.

அந்நாட்டு அரசு இது குறித்து நடந்திய வாக்கெடுப்பில் 75 பேர் பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாக்களித்தனர். வெறும் 30 பேர் மட்டுமே தடைவிதக்க வேண்டாம் என்று வாக்களித்தனர்.

இதனால், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அந்நாட்டில் பொது இடங்களில் பர்தா அணிவதற்கான தடை அமலாக உள்ளது. இதனை மீறினால் அபராதம், தண்டனை ஆகிவயற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது ஒருவர் தன் முகத்தை மறைத்துக்கொள்வது எதிரில் உள்ளவரை அவமதிக்கும் செயல். முகத்தை திரையிட்டு மறைக்கும் பர்தா அணிவதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.

அடுத்த செய்தி