ஆப்நகரம்

பதவியை இழந்தாரா ட்ரம்ப்? அதிகாரபூர்வ இணையதளத்தில் அதிர்ச்சி தகவல்!

டொனால்டு ட்ரம்ப் பதவிக்காலம் நிறைவடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Jan 2021, 9:15 am
அமெரிக்க அரசியலில் பரபரப்பு காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ட்ரம்ப் பதவிக்காலம் நிறைவடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil trump


அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் வெற்றிபெற்றார். எனினும், தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

மேலும், தேர்தல் முடிவை எதிர்த்து ட்ரம்ப் தரப்பில் பல்வேறு நீதிமன்றங்களில் டொனால்ட் ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார். அதில் அனைத்துமே அவருக்கு பின்னடைவே ஏற்பட்டது. இதனிடையே, அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக அமெரிக்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. ஆனால், ஜனவரி 20ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த கோடீஸ்வரி... உணர்ச்சியற்று நின்ற சிறுவன்!
ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் உலகம் முழுக்க இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் டொனால்டு ட்ரம்பின் அதிபர் பதவி ஏற்கனவே முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளது.

நேற்று, "டொனால்டு ஜே. ட்ரம்பின் பதவிக்காலம் 2021-01-11 19:49:00 முடிவடைந்தது," என்று கூறும் செய்தி அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் சுயசரிதை பிரிவில் முடிந்தது.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாஜிக்கு சமமானவர்கள்: அர்னால்டு கடும் தாக்கு!
இந்த சம்பவம் ஹேக்கிங் காரணமாக நடைபெற்றதா அல்லது தவறுதலாக நடைபெற்றதா என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.

சில அமெரிக்க ஊடகங்கள் அதிருப்தி அடைந்த வெளியுறவுத்துறை ஊழியர் ஒருவர் காரணமாக இந்த தவறு நடந்திருப்பதாக கூறியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி