ஆப்நகரம்

குண்டு விழும் வரை வட கொரியாவை விட்டுவைப்போம்: அமெரிக்கா

வட கொரியா தனது முதல் வெடிகுண்டை போடும் வரை அந்நாட்டுடன் உறவை துண்டிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

TNN 15 Oct 2017, 9:23 pm
வட கொரியா தனது முதல் வெடிகுண்டை போடும் வரை அந்நாட்டுடன் உறவை துண்டிக்கப்போவதில்லை என்று அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
Samayam Tamil diplomacy with north korea to continue until first bomb drops us secretary of state rex tillerson
குண்டு விழும் வரை வட கொரியாவை விட்டுவைப்போம்: அமெரிக்கா


வட கொரியாவும் அமெரிக்காவும் மாறிமாறி மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அமெரிக்கா வட கொரியா மீது பல்வேறு புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க காரணமாக இருந்ததால் வட கொரியா கோபத்தில் இருக்கிறது. இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் நிலவுகிறது.

இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த அமெரிக்க அரசின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வட கொரியாவுடனான உறவை தொடரவே விரும்புவதாக அதிபர் டிரம்ப் என்னிடம் தெளிவாக கூறியிருக்கிறார் என்றார். மேலும், வட கொரியாவின் முதல் வெடிகுண்டு விழும் வரை பேச்சுவார்த்தைத் தொடரும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, தனது ட்விட்டர் பதிவில் "குட்டி ராக்கெட் பையன் கிம் யோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாக டில்லர்சன் தன் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறார்" என்று கூறியிருந்தார் டிரம்ப்.

அடுத்த செய்தி