ஆப்நகரம்

இந்தியாவுக்கு மென்டல் டார்ச்சர் கொடுக்க சீனா திட்டம்

இந்தியா, பூடான், திபெத் நாடுகளின் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய ராணுவப்படையை பின்வாங்கச் செய்வதற்காக நூதனத் தொல்லைகளை கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

TNN 21 Jul 2017, 2:57 am
டெல்லி: இந்தியா, பூடான், திபெத் நாடுகளின் சர்வதேச எல்லையில் உள்ள இந்திய ராணுவப்படையை பின்வாங்கச் செய்வதற்காக நூதனத் தொல்லைகளை கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Samayam Tamil doklam stand off china plans to force mental pressure on indian army
இந்தியாவுக்கு மென்டல் டார்ச்சர் கொடுக்க சீனா திட்டம்


இந்தியா, பூடான், திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சர்வதேச எல்லையில் உள்ள பகுதி டோக்லாம் பீடபூமி. இங்கு சாலை அமைக்கும் சீனாவின் முயற்சியை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டால் சீனா எளிதாக இந்தியாவில் ஊடுருவ முடியும் என்பதே இந்தியாவின் எதிர்ப்புக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. இப்பிரச்னையால் இந்தியா, சீனா இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தை டோக்லாம் எல்லையிலிருந்து பின்வாங்கச் செய்தால் மட்டுமே சாலை அமைக்கும் பணி சுமுகமாக நடக்கும் என்பதால், இந்திய வீரர்களுக்கு விதவிதமான உளவியல் தொல்லைகள் கொடுக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த வாரம் சீனாவில் நடக்கவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்துகொள்ள இருக்கிறார். அப்போது, அஜித் தோவால் இந்தியா – சீனா இடையே நிலவும் இந்த பிரச்னை குறித்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன் பேசுவார் எஃன்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி