ஆப்நகரம்

பிரதமர் மோடியுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்!

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகவும், உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு, அவர் வாழ்த்து கூறியதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

TNN 28 Mar 2017, 7:43 am
பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகவும், உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதற்கு, அவர் வாழ்த்து கூறியதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil donald trump calls pm narendra modi congratulates him for up victory
பிரதமர் மோடியுடன் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்!


அண்மையில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக அமோக வெற்றிபெற்றது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ஆட்சியமைக்க, இதர மாநிலங்களில் பாஜக தனித்தும், கூட்டணி அமைத்தும் ஆட்சியை பிடித்துள்ளது.

பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த அமோக ஆதரவே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகும் மோடிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசியுள்ளார். அதில், தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் நிலவும் அரசியல் சூழல் பற்றி இருவரும் விரிவாக, விவாதித்தாகக் கூறப்படுகிறது.

மேலும், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வென்று, ஆட்சியமைத்ததற்காக, டொனால்டு டிரம்ப் மோடிக்கு, வாழ்த்துகளை கூறியுள்ளார். சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்க்க, அமெரிக்காவுடன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கரம்கோர்த்து செயல்பட வேண்டும் என்றும், அப்போது டிரம்ப் கேட்டுக் கொண்டதாக, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

US President Donald Trump called up Prime Minister Narendra Modi on Monday evening and congratulated him on the BJP's huge success in the recent state elections.

அடுத்த செய்தி