ஆப்நகரம்

பரபரக்கும் நியூயார்க் நகரம்.. தனி விமானத்தில் வந்திறங்கிய டொனால்டு டிரம்ப்.. மாட்டப்படுமா "கைவிலங்கு"

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று சரணடைகிறார் டொனால்டு டிரம்ப்.

Samayam Tamil 4 Apr 2023, 3:10 pm
நியூயார்க்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் இன்று சரணடையவுள்ளார்.
Samayam Tamil trump


அமெரிக்க சட்டப்படி அவருக்கு அங்கு கைவிலங்கு பூட்டப்படுமா என்பதுதான் சர்வதேச ஊடங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இதனால் நியூயார்க் நீதிமன்றத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களும், புகைப்பட கலைஞர்களும் குவிந்துள்ளனர். இதையொட்டி, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மீண்டும் அதிபராக ஆசைப்பட்ட டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே அதிக அளவில் விமர்சனத்துக்கு உள்ளானவர் என்றால் அது டொனால்டு டிரம்ப் தான். நிறவெறியை தூண்டும் பேச்சுகளாலும், மனிதநேயமற்ற சில அணுகுமுறைகளாலும் மக்கள் மத்தியில் அவர் மீது ஒருவித வெறுப்பு ஏற்பட்டது. இதுதான் கடந்த அதிபர் தேர்தலிலும் தோல்வி அடைய காரணமாக இருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட ஆயத்தமாகி வந்தார் டிரம்ப்.


ஆபாசப்பட நடிகையுடன் கள்ள உறவு

ஆனால், அவரது இந்த ஆசையின் மீது இடியாக வந்து விழுந்திருக்கிறது ஒரு வழக்கு. அதுவும் ஆபாச நடிகையுடன் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் ஏகத்தும் அவர் பெயர் 'டேமேஜ்' ஆகி வருகிறது.. கடந்த 2005-ம் ஆண்டு தனது மனைவி மெலினாவை டிரம்ப் திருமணம் செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே பிரபல ஆபாச திரைப்பட நடிகையான ஸ்டோமி டேனியல்ஸுடன் கள்ளக்காதலில் டிரம்ப் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த சூழலில், 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடிய அத்தனை விஷயங்களையும் பணம் கொடுத்து சரி கட்டினார். அப்படித்தான், தன்னுடன் கள்ள உறவில் இருந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கும் அவர் 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 கோடி) பணம் கொடுத்துள்ளார்.
"என்ன நடக்கிறது கர்நாடகாவில்..?" அப்பட்டமான படுகொலை.. கர்ஜித்த மு.க. ஸ்டாலின்.. உற்று கவனித்த பாஜக

பெலனி குற்றம்

ஆனால், ஸ்டோமி டேனியல்ஸுடன் அவர் உறவில் இருந்ததும், அவருக்கும் பணம் கொடுத்ததும் பிரச்சினை இல்லை. ஆனால், அந்தப் பணத்தை அவரது பிரச்சாரப் பணத்தில் இருந்து கொடுத்தாக ட்ரம்ப் கணக்கு காட்டியதே தற்போது பிரச்சினையாகி இருக்கிறது. அமெரிக்க சட்டப்படி, இவ்வாறு பிரச்சாரப் பணத்தை ஒருவருக்கு கொடுப்பது 'பெலனி' குற்றமாக கருதப்படுகிறது. இதில் டிரம்ப்பின் வழக்கறிஞர் ஒருவரே சாட்சியாகிவிட்டதால் கையும் களவுமாக மாட்டியுள்ளார் டிரம்ப். எவ்வளவு முயன்று பாரத்தும் இந்த வழக்கில் இருந்து ட்ரம்ப்பால் தப்ப முடியவில்லை.

கைவிலங்கு பூட்டப்படுமா..

இந்நிலையில், இந்த வழக்கில் சரணடைவதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் டிரம்ப் இன்று ஆஜராக உள்ளார். இதற்காக புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று மதியம் நியூயார்க் வந்தார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கிறார். பெலனி குற்றத்தின் கீழ் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைய வரும் போது, அவருக்கு கைவிலங்கு பூட்ட வேண்டும் என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் விதியாகும்.
எனவே, டிரம்ப்புக்கும் கைவிலங்கு பூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அவர் முன்னாள் அதிபர் என்பதை கருத்தில்கொண்டு அவருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அவருக்கு கைவிலங்கு பூட்டப்பட்டால் அதை புகைப்படம் எடுப்பதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

அடுத்த செய்தி