ஆப்நகரம்

பக்தர்கள் முகத்தில் பூச்சி மருந்து அடிக்கும் பாதிரியார் மீது வழக்கு

தென்னாப்பிரிக்காவில் நோய் குணமாகும் என்று கூறி பிரார்த்தனை செய்ய தன்னிடம் வரும் பக்தர்களின் முகத்தில் பூச்சி மருந்து அடித்து வந்த பாதிரியார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 10 Feb 2018, 2:27 pm
தென்னாப்பிரிக்காவில் நோய் குணமாகும் என்று கூறி பிரார்த்தனை செய்ய தன்னிடம் வரும் பக்தர்களின் முகத்தில் பூச்சி மருந்து அடித்து வந்த பாதிரியார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil doom pastor lethebo rabalago found guilty of assault using insecticide
பக்தர்கள் முகத்தில் பூச்சி மருந்து அடிக்கும் பாதிரியார் மீது வழக்கு


தென்னாப்பிரக்கா நாட்டின் லிம்போபோ மாகாணத்தில் உள்ள மூக்கோபோங்க் நகரில் பாதிரியாராக இருப்பவர் லெதேபோ ரபாலகோ. இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் பக்தர்களின் முகத்தில் வேளாண்மைக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வருகிறார்.

தான் தெளிக்கும் இந்த பூச்சிக்கொல்லி மருந்து புற்றுநோய் ம்றறும் எச்ஐவி நோய்களை குணப்படுத்தும் என்று மக்களிடம் போதித்து வந்தார்.

இந்நிலையில், வெள்ளியன்று பக்தர் ஒருவர் இது குறித்து புகார் அளித்ததையடுத்து, அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். இதில், இவர் செய்தது குற்றம் என்று நிரூபிக்கப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வரும் நீதிமன்றம் விரைவில் தண்டனை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி